சோயாமொச்சை

கரிக்கோல் அழுகல்

Macrophomina phaseolina

பூஞ்சைக்காளான்

5 mins to read

சுருக்கமாக

  • பூக்கள் பூக்கும் காலம் மற்றும் சூடான, உலர் வானிலைகளில் அறிகுறிகள் தென்படும்.
  • வீரியம் குறைந்த பயிர்கள் நாளின் வெப்பமான பொழுதில் தளர்வுற்ற நிலைக்கு மாறும்.
  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாகும் மற்றும் கனிப்பகுதிகளில் வெற்றிடமாகத் தானியமற்று இருக்கும்.
  • வேர்கள் மற்றும் தண்டுகள் சிவந்த-பழுப்பு நிறம் கொண்ட தானிய வண்ணமாற்றங்களை உள்புறத் திசுக்களில் ஏற்படுத்தும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

சோயாமொச்சை

அறிகுறிகள்

இந்நோய் பயிரின் எந்த வளர்ச்சிக் காலத்திலும் தாக்கலாம், ஆனால் பூக்கள் பூக்கும் காலத்தின் ஆரம்பத்தில், முக்கியமாக இவை பாதிக்கப்படுகின்றன. நீண்ட கால உலர் மற்றும் வெப்பமான வானிலைகளில் இந்த அறிகுறிகளைப் பொதுவாகக் காணலாம். பயிர்கள் வீரியம் குறைந்ததாக இருக்கும், நாளின் வெப்பமான பொழுதில் தளர்வுற்ற நிலைக்கு மாறும், இரவு நேரங்களில் இப்பயிர்கள் பகுதியளவு மீளப்பெறும். இளம் இலைகள் மஞ்சள் நிறமாகும் மற்றும் கனிப்பகுதிகளில் வெற்றிடமாக தானியமற்று இருக்கும். வேர்கள் மற்றும் தண்டுகள் சிவந்த-பழுப்பு நிறம் கொண்ட தானியங்களில் வண்ணமாற்றங்களை உள்புறத் திசுக்களில் ஏற்படுவதைக் கொண்டு, தண்டுகள் மற்றும் வேர்களில் அழுகல் ஏற்பட்டதை அறியலாம். தண்டுகளின் அடிப்பகுதியில் சீரற்ற முறையில் பரவியிருக்கும் கருப்பு அடையாளங்கள் நோய்க்கான பூஞ்சைகளின் வளர்ச்சியின் பிற அறிகுறிகள் ஆகும்.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

ஒட்டுண்ணி பூஞ்சை டிரிகோடெர்மா எஸ்பிபி மேக்ரோபோமினா பாசியோலினா போன்ற பூஞ்சைகளுக்கு மத்தியில் மற்ற பூஞ்சைகளில் ஒட்டுண்ணி போன்று பற்றிப் படர்கிறது. டிரைகோடெர்மா விரிடேவினை (எஃப் ஒய் எம் அல்லது 250 கிலோ உரத்தில் 5 கிலோ செறிவூட்டப்பட்டது) மண் வழிப் பயன்பாடுகளில் விதைத்தலின்போது பயன்படுத்துவது, நோய் பாதிக்கும் காரணிகளைக் குறைக்கும். ரைசோபியம் பாக்டீரியாக்களை இந்தப் பூஞ்சைகளுக்கு எதிராக கட்டுப்படுத்தப் பயன்படுத்துவது மற்றொரு முறையாகும்.

இரசாயன கட்டுப்பாடு

எப்போதும் உயிரியல் முறைப்படி செடிகளுக்கு சிகிச்சையளிப்பதை, பாதுகாக்கும் வழிமுறைகளுடன் ஒருங்கிணைத்துக் கையாளவும். இந்நோயினைத் தொடர்ச்சியாகக் கட்டுக்குள் வைத்திருக்கும்படியான, எவ்விதப் பூஞ்சைக்கொல்லி விதைச் சிகிச்சை அல்லது இலைவழிச் சிகிச்சை முறைகளும் இல்லை. மான்கோசெப்பினை 3 கிராம்/கிலோ என்ற அளவில் பயன்படுத்தி விதைத்தலின்போது விதைகளில் காரணிப்பொருள் பரவுவதைக் குறைக்கலாம். எம்ஓபியினை 50 கிலோ/ஹெக்டேர் அளவில் இருமுறை பிரித்துப் பயன்படுத்தி அறிகுறிகளின் வீரியத்தினைக் குறைக்கலாம்.

இது எதனால் ஏற்படுகிறது

மேக்ரோபோமினா பாசியோலினா எனும் பூஞ்சைகளால் கரிக்கோல் அழுகல் நோய் ஏற்படுகிறது. இப்பூஞ்சைகள் பயிரின் எஞ்சிய பாகங்கள் அல்லது மண்ணில் உயிர்வாழ்கின்றன, இவை பருவகாலத்தின் ஆரம்பத்திலேயே வேர்களின் வழியே சென்று பயிர்களைப் பாதிக்கின்றன. பாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகள் (உதாரணமாக வெப்பமான, உலர்ந்த வானிலை) தாவரங்களில் அழுத்தம் உண்டாக்கும் வரை அறிகுறிகள் மறைந்திருக்கும் . வேர்களின் உள்புறத் திசுக்களை பாதித்து, பயிருக்கு நீர் தேவைப்படும் முக்கியமான நேரங்களில் நீர் கிடைக்காதபடி செய்துவிடும். மற்ற பூஞ்சைகளைப்போல் அல்லாமல், கரிக்கோல் அழுகல் பூஞ்சைகளின் வளர்ச்சி உலர்ந்த மண்ணைச் சார்ந்து (27-35 டிகிரி செல்சியஸ்) அமைந்துள்ளது.


தடுப்பு முறைகள்

  • சகிப்புத் தன்மை கொண்ட வகைப் பயிர்கள் கிடைத்தால் அவற்றைப் பயிரிடவும்.
  • அதிகளவிலான விதைகளை நிலத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • தொடர்ச்சியாக நிலத்திற்கு நீர்ப்பாசனம் அளிக்கவும், முக்கியமாக வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலைகளில் அளிக்கவும்.
  • ஆழமான கோடை உழவு மண்ணில் நோய்க்கிருமிகள் உட்செலுத்தப்படுவதைக் குறைக்கலாம்.
  • முந்தைய அல்லது பிந்தைய வகைப் பயிர்களை வானிலை அமைப்பைப் பொறுத்துப் பயன்படுத்தவும்.
  • கோதுமை போன்ற பிறவகைப் பயிர்களுடன் பயிர்சுழற்சி செய்யவும் அல்லது எளிமையாக தரிசு நிலத்தினை செயல்படுத்தவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க