விதையவரை

அவரை ஈ

Ophiomyia phaseoli

பூச்சி

5 mins to read

சுருக்கமாக

  • புள்ளிகளையுடைய இலைகள்.
  • இலை தண்டு மீது வெள்ளி நிறத்தில் காணப்படும் வளைந்த கோடுகள், பின்னர் அடர் நிறமாக மாறும்.
  • இலைகள் உலர்ந்து உதிர்தல்.
  • அடர் நிறத்தில் சிறிய ஈ.

இதிலும் கூடக் காணப்படும்


விதையவரை

அறிகுறிகள்

இளம் இலைகளின் மேல் பகுதியில், குறிப்பாக இலையின் அடிப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான துளைகள் மற்றும் வெளிர் மஞ்சள் புள்ளிகள் காணப்படும். இலை காம்புகள் மற்றும் தண்டுகள் வழியாக முட்டைப்புழுக்கள் துளையிடும், பின்னர் இவை வெள்ளி நிறத்தில், வளைந்த கோடுகளாகத் தோன்றும். இலையின் மேல் பக்கத்தில் ஒரு சில சுரங்க துளைகள் மட்டுமே தெரியும், இவை பின்னர் அடர் பழுப்பு நிறமாக மாறும் மற்றும் இலைகள் வாடிப்போவது தெளிவாக தெரியும். இந்த இலைகள் வறண்டு போகக்கூடும், மேலும் உதிரவும்கூடும். பாதிக்கப்பட்ட முதிர்ந்த தாவரங்களில் தண்டுகள் வீங்கி, சில நேரங்களில் இலைகள் வாடிவிடும்.உண்ணும் சுரங்கங்கள் தண்டுகளில் தெளிவாகத் தெரியும். முட்டைப்புழுக்களின் தீவிரமான உண்ணும் செயல்பாடானது வேர்-தண்டு சந்திக்கும் பகுதியை சுற்றி உள்ள உட்புற திசுக்கள் அழிந்துபோவதற்கு வழிவகுக்கிறது, இது இலைகள் மஞ்சள் நிறமாகுதல், தாவரங்களின் வளர்ச்சி குன்றுதல் மற்றும் தாவர இறப்புக்கும் கூட வழிவகுக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாவரம் முளைத்த 10-15 நாட்களுக்குள் கொல்லப்படுகிறது.

Recommendations

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

அவரை ஈக்களுக்கு பல இயற்கை எதிரிகள் உள்ளன. ஓபியஸ் இனத்தின் பல பிராக்கோனிட் குளவி முட்டைப்புழு ஒட்டுண்ணிகள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஓபியஸ் ஃபாசியோலி மற்றும் ஓபியஸ் இம்போர்டேட்டஸ் ஆகிய இரண்டு இனங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து 1969 ஆம் ஆண்டில் ஹவாயில் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் அவ்வப்போது அவரை ஈக்களின் படையெடுப்பும் ஏற்படத்தான் செய்கின்றன. சில பகுதிகளில் பூச்சிகளின் இறப்பு 90% வரை எட்டலாம். கிழக்கு ஆபிரிக்காவில் பூஞ்சை நோய்க்கிருமிகளை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளும் பூச்சி மேலாண்மை கருவியாக சோதிக்கப்பட்டன.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால் தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். தொற்றுநோய்கள் கடுமையாக இருக்கும் இடங்களில், அவரை ஈக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவது குறித்து கருத்தில் கொள்ளலாம். இருப்பினும், சேதத்தை ஏற்படுத்தும் முட்டைப்புழுக்கள் தாவரங்களுக்குள் நன்கு பாதுகாப்பாக இருக்கின்றன. பயிரை விதைக்கும்போதே அல்லது முளைத்த உடனேயே மண்ணில் இமிடாக்ளோப்ரிட் கொண்ட இரசாயன பொருட்களை தெளிப்பது பயனுள்ளதாக இருக்கும். நாற்றுகள் தோன்றிய 3-4 நாட்களுக்குப் பிறகு சிகிச்சையளிக்கப்படுகின்றன, மேலும் அவரை ஈ தொற்று கடுமையானதாக இருந்தால், 7 நாட்களிலும், மற்றும் அநேகமாக 14 நாட்களிலும் மீண்டும் சிகிச்சையளிக்கலாம். பொதுவாக பயன்படுத்தப்படும் பிற செயலில் உள்ள பொருட்கள் டைமீத்தோயேட் ஆகும், இது முறையானது. பட்டியலிடப்பட்ட அனைத்து இரசாயனங்களும் அபாயகரமானவை என வகைப்படுத்தப்படுகின்றன, மேலும் அவை கவனமாகக் கையாளப்பட வேண்டும்.

இது எதனால் ஏற்படுகிறது

உலகின் மிக அழிவுகரமான பூச்சிகளில் ஒன்றான ஒபியோமியா ஃபெசியோலி என்ற அவரை ஈக்களின் முட்டைப்புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகளால் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது ஆசியா, ஆப்பிரிக்கா, ஹவாய் மற்றும் ஓசியானியாவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் பரவலாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில், இது 30-50% விளைச்சல் இழப்புக்கு வழிவகுக்கும். சேதத்தின் தீவிரம் பருவகாலமாகத் தெரிகிறது, இதன் விளைவாக வறண்ட பருவத்தில் ஈரமான பருவத்தை விட (முறையே 80% மற்றும் 13%) இறப்பு ஏற்படுகிறது. முதிர்ந்த பூச்சிகள் மற்றும் இளம் பூச்சிகள் குறிப்பாக நாற்றுகளாக இருக்கும் நிலையில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. முதிர்ந்த பூச்சிகள் இளம் இலைகளில் துளைகளை ஏற்படுத்தி, இலையின் காம்புகளுக்கு இடையே வெள்ளை, நீள்கோள முட்டைகளை இடுகின்றன. வளரும் முட்டைப்புழுக்கள் தண்டு வழியாக முதன்மை வேரில் கீழ்நோக்கி குடைந்து, தண்டின் அடிப்பகுதியில் மணல் பரப்பிற்கு அருகே கூட்டுப்புழுக்களாக மாற திரும்புகின்றன. கூட்டுப்புழுக்களாவது வெப்பநிலையை பொறுத்து 10-12 நாட்கள் வரை நீடிக்கும்.


தடுப்பு முறைகள்

  • எதிர்ப்பு சக்தி உடைய வகைகள் கிடைக்கப்பெற்றால் அவற்றை நடவு செய்யவும்.
  • ஈரமான பருவத்தில் நடவு செய்யவும்.
  • நடவு செய்வதற்கு முன் தானே வளரும் தாவரங்கள் மற்றும் களைகளை அகற்றவும், குறிப்பாக அவரை இனத்தைச் சார்ந்த தாவரங்களை அகற்றவும்.
  • ஒரே வகையை சார்ந்த முதிர்ந்த பயிர்களுக்கு அடுத்ததாக அல்லது ஒரே குடும்பத்தில் உள்ள பிற வகைகளுக்கு அடுத்ததாக அவரையை பயிரிட வேண்டாம்.
  • தாவரங்களுக்கு இடையே முடிந்தவரை இடைவெளி விடவும்.
  • ஆரம்ப வளர்ச்சியின் போது (முளைத்த 2-3 வாரங்கள்) வேர்களை தழைக்கூளம் கொண்டு மூடி வைக்கவும், எடுத்துக்காட்டாக, வாழை இலைகள், அரிசி வைக்கோல் அல்லது புல்.
  • முளைத்த முதல் நான்கு முதல் ஐந்து வாரங்களில் சேதங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்ன கண்காணித்து, பூச்சியைக் கட்டுப்படுத்தவும்.
  • அறுவடைக்குப் பிறகு பயிர் குப்பைகளை சேகரித்து எரிக்கவும் அல்லது புதைக்கவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க